* _ ‘’திறமையும்...! வெற்றியும்,..!!" _ * ஒரு மனிதனின் வெற்றி. அவர் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்... கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமைதான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது... பலமுறை அரசரின் மரண தண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்குத்திறமை காப்பாற்றி இருக்கிறது... பீர்பாலின் திறமையான பேச்சுக் கதைகளையும் நாம் அறிவோம்... நம் ஊர்களில் குப்பை பொருள்களை திறமையாகப் பேசி, நம்மிடம் புகுத்தும் விற்பனை அலுவலர்களை நாம் அறிவோம்... நம்மைப் பற்றி நம் பெற்றோர்கள் வருந்தும்போது கூறக்கூடிய வார்த்தை 'கொஞ்சம் கூட திறமை (சாமர்த்தியம்) போதாது இவனுக்கு" என்பதுதான்... இப்போது ஒரு சிறுகதை... ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி... 'பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட குழியில் நீங்கள் வீழ்ந்துவிட்டால் "எப்படி வெளியே வருவீர்கள்...?' என்பதுதான்... ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முய...